அங்காரா, பிப்.12- துருக்கி-சிரியாவில் கடந்த 6-ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் தரைமட்டமான ஆயிரக் கணக்கான வீடு, கட்டிட இடிபாடுகளில் தொடர்ந்து மீட்கும் பணி நடந்து வரு கிறது. இந்நிலையில், துருக்கி ஹடாய் நகரில் கட்டிட இடிபாடு களை அகற்றிய போது ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே மீட்புக் குழுவினர் இடிபாடுகளை வேகமாக அகற்றி பார்த்தபோது, அங்கு பச்சிளம் குழந்தை ஒன்று இருந்துள்ளது. பின்னர் 128 மணி நேரத்துக்கு பிறகு இடிபாடுகளில் இருந்து 2 மாத பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்டனர். உடனே குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த குழந்தையை மீட்டப்போது, அங்கிருந்த மீட்புக்குழுவினர், பொது மக்கள் கைகளை தட்டி மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். அக்குழந்தை தற்போது நலமாக இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.